கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை

கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த புகார் அடிப்படையில் 60க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பீளமேடு, சரவணம்பட்டி, ஈச்சனாரி பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.



கோவை: கோவை மாநகர காவல்துறையினருக்கு கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது.



இதனையடுத்து, கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் பல்வேறு இடங்களில் 60க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.



இந்த சோதனையின் போது, கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் வேறு யாரேனும் தங்கி இருக்கிறார்களா, வேறு ஏதேனும் சட்டவிரோத பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



இந்த அதிரடி சோதனையில் காவல் ஆய்வாளர்கள் கந்தசாமி, அருண், ராஜேஷ், முத்துலட்சுமி, தௌலத் நிஷா, பிரான்சிலின், சரவணன் மற்றும் உதவி ஆணையர் பார்த்திபன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.



பீளமேடு, சரவணம்பட்டி, ஈச்சனாரி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த திடீர் சோதனை நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...