பீளமேடு மேம்பால ஏறுதள தூண் அமைப்பை மாற்ற அதிமுக மனு: கோவை ஆட்சியரிடம் வலியுறுத்தல்

கோவை பீளமேடு பகுதியில் அமைக்கப்படும் மேம்பால ஏறுதள தூணின் இடத்தை மாற்றக் கோரி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பாரம்பரிய சாலையை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.


கோவை: கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலத்தின் ஏறுதளத்தின் தூண் அமைக்கும் பணியை மாற்றி அமைக்க வேண்டி வலியுறுத்தி அதிமுக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், பாரம்பரியம் மிக்க இந்த சாலைக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை தொடர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இதனைத் தொடர்ந்து, கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் K. அர்சுனன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R. ஜெயராம் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் நேரில் சென்று மனு அளிக்கப்பட்டது.



பொதுமக்கள் நலன் கருதி இப்பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி உத்தம ராமசாமி, முன்னாள் கவுன்சிலர் பீளமேடு துரைசாமி, வசந்தாலயா மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், விளாங்குறிச்சி சாலை மீட்பு குழுவின் விஜயக்குமார், செந்தில்குமார், நந்த கோபால், ராமமூர்த்தி பிரகாஷ், பாரதிதாசன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...