குமாரபாளையம் கொள்ளை சம்பவம்: கைது செய்யப்பட்ட குற்றவாளி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல் குமாரபாளையத்தில் நடந்த கன்டெய்னர் கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கோவை: நாமக்கல் குமாரபாளையத்தில் நடந்த கன்டெய்னர் கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



குமாரபாளையத்தில் சந்தேகத்திற்குரிய கன்டெய்னர் லாரியை காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர். அப்போது கன்டெய்னரில் கட்டு கட்டாக பணம் மற்றும் சொகுசு காருடன் 7 கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். இதனால் காவல்துறையினர் கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட, மீதமுள்ள 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொள்ளையர்களின் தாக்குதலில் காவல்துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் முதலில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.



தற்போது அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...