குமாரபாளையம் கொள்ளை சம்பவம்: கைது செய்யப்பட்ட குற்றவாளி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல் குமாரபாளையத்தில் நடந்த கன்டெய்னர் கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கோவை: நாமக்கல் குமாரபாளையத்தில் நடந்த கன்டெய்னர் கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



குமாரபாளையத்தில் சந்தேகத்திற்குரிய கன்டெய்னர் லாரியை காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர். அப்போது கன்டெய்னரில் கட்டு கட்டாக பணம் மற்றும் சொகுசு காருடன் 7 கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். இதனால் காவல்துறையினர் கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட, மீதமுள்ள 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொள்ளையர்களின் தாக்குதலில் காவல்துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் முதலில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.



தற்போது அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...