குமாரபாளையம் கொள்ளை சம்பவம்: கைது செய்யப்பட்ட குற்றவாளி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல் குமாரபாளையத்தில் நடந்த கன்டெய்னர் கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கோவை: நாமக்கல் குமாரபாளையத்தில் நடந்த கன்டெய்னர் கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



குமாரபாளையத்தில் சந்தேகத்திற்குரிய கன்டெய்னர் லாரியை காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர். அப்போது கன்டெய்னரில் கட்டு கட்டாக பணம் மற்றும் சொகுசு காருடன் 7 கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். இதனால் காவல்துறையினர் கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட, மீதமுள்ள 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொள்ளையர்களின் தாக்குதலில் காவல்துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் முதலில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.



தற்போது அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...