கோவை குமரகுரு கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது

கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது. 45 நகரங்களில் இருந்து 3,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சி, தொழில்துறை காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன.


கோவை: கோவையில் உள்ள குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது. யங் இந்தியன்ஸ் அமைப்பின் கோவை பதிப்பும் குமரகுரு கல்லூரியும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தன.



"INSPIRE our Younger Generation towards Building Bharat" என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் 45 நகரங்களில் உள்ள 153 பள்ளிகளிலிருந்து 3,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



மாணவர்களின் படைப்புத்திறன், நுண் சிந்தனைத் திறன், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் உள்ளிட்ட திறன்களை வளர்க்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் 30 அறிவியல் கண்காட்சி அரங்குகளும், 4 தொழில்துறை காட்சி அரங்குகளும் இடம் பெற்றன. இவை மாணவர்கள் அறிவியலின் பல்வேறு பிரிவுகள் குறித்து புரிந்து கொள்ளவும், தொழில்துறையில் தற்போதைய வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ளவும் உதவும் வகையில் அமைக்கப்பட்டன.



இயற்கை விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் உள்ள தொழில்நுட்பங்கள், மோட்டார், ரோபோட், டிரோன் தொழில்நுட்பங்கள் குறித்த அரங்குகளை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். குறிப்பாக இந்நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்றான ஜவுளிக்கான அரங்கில் இடம்பெற்ற நேரடி கைத்தறி செயல்முறை விளக்கங்களை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...