கோவை குமரகுரு கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது

கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது. 45 நகரங்களில் இருந்து 3,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சி, தொழில்துறை காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன.


கோவை: கோவையில் உள்ள குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது. யங் இந்தியன்ஸ் அமைப்பின் கோவை பதிப்பும் குமரகுரு கல்லூரியும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தன.



"INSPIRE our Younger Generation towards Building Bharat" என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் 45 நகரங்களில் உள்ள 153 பள்ளிகளிலிருந்து 3,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



மாணவர்களின் படைப்புத்திறன், நுண் சிந்தனைத் திறன், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் உள்ளிட்ட திறன்களை வளர்க்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் 30 அறிவியல் கண்காட்சி அரங்குகளும், 4 தொழில்துறை காட்சி அரங்குகளும் இடம் பெற்றன. இவை மாணவர்கள் அறிவியலின் பல்வேறு பிரிவுகள் குறித்து புரிந்து கொள்ளவும், தொழில்துறையில் தற்போதைய வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ளவும் உதவும் வகையில் அமைக்கப்பட்டன.



இயற்கை விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் உள்ள தொழில்நுட்பங்கள், மோட்டார், ரோபோட், டிரோன் தொழில்நுட்பங்கள் குறித்த அரங்குகளை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். குறிப்பாக இந்நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்றான ஜவுளிக்கான அரங்கில் இடம்பெற்ற நேரடி கைத்தறி செயல்முறை விளக்கங்களை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...