கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தூய்மை பணியாளர்களுக்கான தாட்கோ திட்ட கடனுதவி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இன்று (27.09.2024) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஆணையாளர் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கான நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.



தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ நல வாரிய அட்டை வழங்குதல், ESI, PF வசதிகள் பெறுவதற்கான விபரங்களை பதிவு செய்தல், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக பள்ளியில் பயிலும் தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.3,500 உதவித்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.



மேலும், சம்பள கணக்கு வைத்திருக்கும் வங்கியில் வருடம் ரூ.450 பிடித்தம் செய்து, ரூ.2.00 இலட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு கிடைக்க வழிவகை செய்தல், தூய்மைப்பணியாளர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க ஏற்பாடு செய்தல் போன்ற திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டை பெறுவதன் மூலமாக திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, கை, கால் இழத்தல், பார்வை இழப்பு மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை போன்ற பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார். அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை பெற்று பயன்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, செந்தில்குமரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ), கே.மகேஷ்வரி, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், ராஜேந்திரன், முருகன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...