எஸ்.எஸ்.குளம் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு - நூற்றுக்கணக்கான மக்களுடன் வந்த அதிமுக எம்எல்ஏ

கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சி தலைவர் கவிதா மீது முறைகேடு புகார். அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.



கோவை: கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர் கவிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வெள்ளாணைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கவிதா, சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து, அந்த ஊராட்சியில் சிறப்பு அலுவலரால் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டபோது, கவிதா மீண்டும் தனக்கு சாதகமானவர்களைக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டபோது, கவிதாவை சார்ந்தவர்கள் தங்களிடம் தகராறு செய்வதாக கூறி, அந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களான சுமதி வடிவேலு, சகுந்தலா தேவி, ராஜேஸ்வரி, செல்வி ஆகியோர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமாரை அணுகினர். அவரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

மேலும், கவிதா தங்களை ஜாதி பெயரைக் குறிப்பிட்டு இழிவுபடுத்துவதாகவும், தங்கள் மீது பொய் புகார் அளித்திருப்பதாகவும் கூறிய வார்டு உறுப்பினர்கள், அவர் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், "நடந்த விஷயம் குறித்து விளக்கமளிக்க வந்தோம். மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்," என்று தெரிவித்தார்.



மனு அளிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து வந்ததால், சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...