எஸ்.எஸ்.குளம் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு - நூற்றுக்கணக்கான மக்களுடன் வந்த அதிமுக எம்எல்ஏ

கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சி தலைவர் கவிதா மீது முறைகேடு புகார். அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.



கோவை: கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர் கவிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வெள்ளாணைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கவிதா, சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து, அந்த ஊராட்சியில் சிறப்பு அலுவலரால் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டபோது, கவிதா மீண்டும் தனக்கு சாதகமானவர்களைக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டபோது, கவிதாவை சார்ந்தவர்கள் தங்களிடம் தகராறு செய்வதாக கூறி, அந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களான சுமதி வடிவேலு, சகுந்தலா தேவி, ராஜேஸ்வரி, செல்வி ஆகியோர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமாரை அணுகினர். அவரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

மேலும், கவிதா தங்களை ஜாதி பெயரைக் குறிப்பிட்டு இழிவுபடுத்துவதாகவும், தங்கள் மீது பொய் புகார் அளித்திருப்பதாகவும் கூறிய வார்டு உறுப்பினர்கள், அவர் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், "நடந்த விஷயம் குறித்து விளக்கமளிக்க வந்தோம். மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்," என்று தெரிவித்தார்.



மனு அளிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து வந்ததால், சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...