சிறையில் இருந்து விடுதலையான சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

மதுரை சிறையில் இருந்து விடுதலையான சவுக்கு சங்கர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், தனது மீடியா நிறுவனம் மீண்டும் இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


மதுரை சிறையில் இருந்து செப்டம்பர் 25 மாலை விடுதலை செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சிறை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், தான் உண்மைகளை பேசுவதால்தான் தன்னை புழல் சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றி, இரண்டாவது முறையாக கைது செய்ததாகக் குற்றம்சாட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் இல்லை என்றும், தந்தையின் நிழலில் வளர்ந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சவுக்கு மீடியா ஏழு மாதங்களாக உண்மைகளை வெளிப்படுத்தியதால்தான் அலுவலகம் சீல் வைக்கப்பட்டதாகவும், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், தனது வீடு சீல் வைக்கப்பட்டதாகவும், தனது தாயாரின் பென்ஷன் கணக்குகள் உள்பட அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

உண்மை வெளிவந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் மிக கவனமாக உள்ளதாக சவுக்கு சங்கர் குறிப்பிட்டார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், மெத்தனால் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் உள்துறைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கடிதம் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பல உயிர்கள் பலியாகியிருக்காது என்றும், இது போன்ற பல உண்மைகள் மக்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகவே சவுக்கு மீடியா முடக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

முன்பு இருந்தது போல அதே வீரியத்துடன் தொடர்ந்து செயல்பட்டு மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்வதாகவும், சில காலங்களுக்குப் பிறகு சவுக்கு மீடியா மீண்டும் இயங்கத் தொடங்கும் என்றும் சவுக்கு சங்கர் தெரிவித்தார். கோவை சிறையில் தனது கை உடைக்கப்பட்டதாகவும், மற்ற சிறைகளில் தன்னை வழக்கமான கைதி போலவே நடத்தினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...