தமிழகத்தில் குண்டாஸ் சட்டம் மோசமாக பயன்படுத்தப்படுகிறது - கோவையில் சவுக்கு சங்கர் வழக்கறிஞர்

கோவையில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியாவில் போடப்படும் குண்டாஸில் 51% தமிழகத்தில் மட்டும் போடப்படுவதாகவும், தமிழ்நாடு போலீஸ் ஸ்டேடாக மாறி வருவதாகவும் கூறினார்.



கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த இரண்டாவது குண்டாஸ் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அவரை விடுதலை செய்யச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசே சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த குண்டாஸை திரும்பப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

இந்தியா முழுவதும் போடப்படுகிற குண்டாஸில் 51% தமிழகத்தில் மட்டும் போடப்படுவதாகவும் குண்டாஸ் சட்டம் தமிழகத்தில் மிகவும் மோசமாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். தமிழக அரசு, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுபவர்கள் மீது கவனம் செலுத்தாமல் மக்களின் அன்றாட பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும் நிலையை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது சாதாரண குற்றவாளியை பிடிப்பதற்கு கூட கை கால்களை உடைத்தும் துப்பாக்கி சூடு நடத்தியும் கைது செய்யப்படுவதாகவும் தமிழ்நாடு போலீஸ் ஸ்டேடாக மாறி வருவதாகவும் கூறினார். சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டிருக்கும் பிணைகளில், பேட்டியளிக்கக்கூடாது, பேசக்கூடாது என்று எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால், யார் அவதூறு பரப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் குறிப்பிட்ட ஒரு சாரார் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கூறினார். தற்போது துப்பாக்கிச் சூடு என்பது மிகவும் இயல்பான ஒன்றாக மாறி வருவதாகவும் இது மிகவும் ஆபத்தான விஷயம் என்றும் கூறிய அவர், இத்தனை துப்பாக்கிச் சூடுகள் நடத்தி கைது செய்யப்பட்டது போன்று நக்சலைட் பரவலாக இருந்த மாநிலங்களில் கூட இல்லை என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...