கோவை இராமநாதபுரம் பகுதியில் திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் இராமநாதபுரம் பகுதியில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். குடிநீர் திட்டம், வார்டு அலுவலகம், திருமண மண்டபம் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.



கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், இன்று (25.09.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி ஆணையாளர் தினசரி களஆய்வு மேற்கொண்டு பணிகளின் முன்னேற்றத்தை கண்காணித்து வருகிறார்.



மத்திய மண்டலம், வார்டு எண் 63-க்குட்பட்ட இராமநாதபுரம், அங்கண்ணன் லே-அவுட் பகுதியில் சூயஸ் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.



பணிகளை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



இராமநாதபுரம், இராமலிங்க ஜோதி நகரில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தை புனரமைத்து வார்டு அலுவலகமாக பயன்படுத்தவும்,



நாகப்ப தேவர் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தை புனரமைக்கவும் உத்தரவிட்டார்.



இராமநாதபுரம் பிரதான சாலை சந்திப்பில் பாதாள சாக்கடையின் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தினார்.



ஒலம்பஸ் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சி பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்தும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் நடராஜ், சக்திவேல், பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...