அதிமுக நிர்வாகிகள் தாக்குதல் வழக்கு: கோவை நீதிமன்றத்தில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆஜர்

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜரானார். பல திமுக நிர்வாகிகள் அவருடன் வருகை தந்தனர்.


Coimbatore: கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக கோவை ஜே.எம். 1 நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை ஆஜரானார்.

இந்த வழக்கு, கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பானது. "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" என்ற புத்தகத்தை நா.கார்த்திக் பொதுமக்களுக்கு விநியோகித்த போது, அருகிலிருந்த அதிமுக மன்றம், பெயர்ப்பலகை மற்றும் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி, அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.



நீதிமன்றத்திற்கு நா.கார்த்திக்குடன் பல முக்கிய திமுக நிர்வாகிகள் வருகை தந்தனர். இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன், வழக்கறிஞர்கள் அகஸ்டஸ், ப.கிருஷ்ணமூர்த்தி, மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன், மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன் உள்ளிட்ட பலர் அடங்குவர்.

மேலும், சரவணன், என்.ஆர்.விக்ரம், முத்து விஜயன், மணிவேல், மதிவாணன், கண்ணன், குமணன், சலாவுதீன், சி.என்.சந்திரன், ராஜமாணிக்கம், முத்துக்குமார், ஜீவா, நிஜலிங்கப்பா, லிங்கராஜா, சின்னத்துரை, வெங்கடாசலம், ராஜ்குமார், சதீஷ், மகாவிஷ்ணு, ஆனந்த குமார், விஷால், சந்திரமோகன், முருகானந்தம், பிரபாகரன், ஸ்டீபன், மாதவன், எலிசபெத் ராணி, கலைவாணி, மோகன்குமார், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா போன்ற பல திமுக நிர்வாகிகளும் வருகை தந்தனர்.

வட்டக்கழக செயலாளர்கள் டவுன் பா.ஆனந்தன், நாராயணன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி, கேசவன், இரா.நாகராஜ், சபரி கோபால், அபி, பிரின்ஸ், கிரீன் வேசுப்பிரமணி, நூல் ஆறுமுகம், கலியமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...