அதிமுக நிர்வாகிகள் தாக்குதல் வழக்கு: கோவை நீதிமன்றத்தில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆஜர்

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜரானார். பல திமுக நிர்வாகிகள் அவருடன் வருகை தந்தனர்.


Coimbatore: கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக கோவை ஜே.எம். 1 நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை ஆஜரானார்.

இந்த வழக்கு, கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பானது. "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" என்ற புத்தகத்தை நா.கார்த்திக் பொதுமக்களுக்கு விநியோகித்த போது, அருகிலிருந்த அதிமுக மன்றம், பெயர்ப்பலகை மற்றும் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி, அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.



நீதிமன்றத்திற்கு நா.கார்த்திக்குடன் பல முக்கிய திமுக நிர்வாகிகள் வருகை தந்தனர். இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன், வழக்கறிஞர்கள் அகஸ்டஸ், ப.கிருஷ்ணமூர்த்தி, மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன், மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன் உள்ளிட்ட பலர் அடங்குவர்.

மேலும், சரவணன், என்.ஆர்.விக்ரம், முத்து விஜயன், மணிவேல், மதிவாணன், கண்ணன், குமணன், சலாவுதீன், சி.என்.சந்திரன், ராஜமாணிக்கம், முத்துக்குமார், ஜீவா, நிஜலிங்கப்பா, லிங்கராஜா, சின்னத்துரை, வெங்கடாசலம், ராஜ்குமார், சதீஷ், மகாவிஷ்ணு, ஆனந்த குமார், விஷால், சந்திரமோகன், முருகானந்தம், பிரபாகரன், ஸ்டீபன், மாதவன், எலிசபெத் ராணி, கலைவாணி, மோகன்குமார், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா போன்ற பல திமுக நிர்வாகிகளும் வருகை தந்தனர்.

வட்டக்கழக செயலாளர்கள் டவுன் பா.ஆனந்தன், நாராயணன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி, கேசவன், இரா.நாகராஜ், சபரி கோபால், அபி, பிரின்ஸ், கிரீன் வேசுப்பிரமணி, நூல் ஆறுமுகம், கலியமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...