குருவின் பிறந்த நாளில் மறைந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி: வானதி சீனிவாசன் எம்எல்ஏ நினைவஞ்சலி

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாஜக முன்னாள் தேசியத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நாளில் அவரது அரசியல் வாழ்க்கை குறித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் பாஜக முன்னாள் தேசியத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது அரசியல் வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, பள்ளிப் படிப்பின் போதே ஆர்.எஸ்.எஸ்.இல் இணைந்தார். மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். தடைக்கு எதிராக மதுரையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று சிறு வயதிலேயே கைது செய்யப்பட்டார்.

பண்டித் தீன்தயாள் உபாத்தியாய மறைவுக்குப் பின் வாஜ்பாயின் அழைப்பை ஏற்று ஜன சங்கத்தின் முழுநேர ஊழியரானார். கச்சத் தீவு விவகாரத்தில் இந்திரா காந்தியின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எமர்ஜென்சி காலத்திலும், 1977 தேர்தலிலும் முக்கிய பங்காற்றினார்.

1998 மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெறும் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கொள்கைக்காக வாழ்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, தனது அரசியல் குரு பண்டித் தீந்தயாள் உபாத்தியாயவின் பிறந்த நாளான செப்டம்பர் 25 அன்றே மறைந்தார்.

காமராஜருக்குப் பின் தேசியக் கட்சி ஒன்றின் தேசியத் தலைவரான தமிழர் என்ற பெருமையை பெற்ற ஜனா கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நாளில் அவரை போற்றி வணங்குவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...