குருவின் பிறந்த நாளில் மறைந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி: வானதி சீனிவாசன் எம்எல்ஏ நினைவஞ்சலி

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாஜக முன்னாள் தேசியத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நாளில் அவரது அரசியல் வாழ்க்கை குறித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் பாஜக முன்னாள் தேசியத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது அரசியல் வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, பள்ளிப் படிப்பின் போதே ஆர்.எஸ்.எஸ்.இல் இணைந்தார். மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். தடைக்கு எதிராக மதுரையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று சிறு வயதிலேயே கைது செய்யப்பட்டார்.

பண்டித் தீன்தயாள் உபாத்தியாய மறைவுக்குப் பின் வாஜ்பாயின் அழைப்பை ஏற்று ஜன சங்கத்தின் முழுநேர ஊழியரானார். கச்சத் தீவு விவகாரத்தில் இந்திரா காந்தியின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எமர்ஜென்சி காலத்திலும், 1977 தேர்தலிலும் முக்கிய பங்காற்றினார்.

1998 மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெறும் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கொள்கைக்காக வாழ்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, தனது அரசியல் குரு பண்டித் தீந்தயாள் உபாத்தியாயவின் பிறந்த நாளான செப்டம்பர் 25 அன்றே மறைந்தார்.

காமராஜருக்குப் பின் தேசியக் கட்சி ஒன்றின் தேசியத் தலைவரான தமிழர் என்ற பெருமையை பெற்ற ஜனா கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நாளில் அவரை போற்றி வணங்குவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...