ஜாதி பாகுபாடு: பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு வழங்கியதாக மாணவியின் தாய் புகார்

கோவை ராசிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் ஜாதி பாகுபாடு காட்டி தன் மகளுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டதாக மாணவியின் தாய் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.



Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் ராசிபாளையத்தைச் சேர்ந்த இந்திராகாந்தி என்பவர் தனது மகளுக்கு ஜாதியை காரணம் காட்டி பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்திராகாந்தியின் மகள் ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் தனது மகள் மட்டுமே கலந்து கொண்டதாகவும், ஆனால் தலைமை ஆசிரியர் ஜாதியை காரணம் காட்டி பேச்சுப் போட்டியில் பங்கேற்காத வேறு மாணவிக்கு முதல் பரிசையும் தனது மகளுக்கு இரண்டாவது பரிசையும் அளித்ததாக இந்திராகாந்தி குற்றம் சாட்டியுள்ளார்.



இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, "உனது குழந்தைக்கு பரிசு கொடுத்ததே தவறு" என்று கூறி, தன்னையும் தன் மகளையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக இந்திராகாந்தி தெரிவித்துள்ளார். ஜாதியின் அடிப்படையில் பரிசளித்தது வேதனை அளிப்பதாக கூறும் இந்திராகாந்தி, தலைமையாசிரியர் நிர்மலா ஆரோக்கிய மேரி மற்றும் ஆசிரியர் சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.



ஏற்கனவே இது குறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறும் இந்திராகாந்தி, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...