கோவையில் இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: பிசியோதெரபிஸ்ட் கைது

கோவை ஐ.ஓ.பி. காலனியில் 68 வயது பிசியோதெரபிஸ்ட் 23 வயது இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். சம்பவம் 2023 ஜனவரியில் நடந்தது.


Coimbatore: கோவை மருதமலை அடுத்த ஐ.ஓ.பி. காலனியைச் சேர்ந்த 68 வயது பிசியோதெரபிஸ்ட் அனந்தகிருஷ்ணன், 23 வயது இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2022ம் ஆண்டு ஐ.ஓ.பி. காலனியில் புதிதாக வீடு கட்டி வந்த அனந்தகிருஷ்ணன், கோவை ராமநாதபுரத்தில் தங்கி கட்டடக்கலை நிபுணராக பணிபுரிந்து வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை கட்டட வடிவமைப்பிற்காக அழைத்திருந்தார். இதன்போது இருவரும் நட்பாகப் பழகி வந்தனர்.



2023ம் ஆண்டு ஜனவரி மாதம், புதிய வீட்டின் வடிவமைப்பு குறித்து சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி அனந்தகிருஷ்ணன் அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்தார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த காபி கொடுத்து, மயங்கிய நிலையில் பாலியல் பலாத்காரம் செய்தார்.

கண் விழித்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்று வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகாரை ஏற்க மறுத்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பெண் தேசிய மகளிர் ஆணையத்தை நாடினார்.



மகளிர் ஆணையம் இது குறித்து விசாரணை நடத்தும்படியும், வடவள்ளி காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், போத்தனூர் உதவி ஆணையர் கரிகால் பாரி சங்கரை சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமித்தார்.

விசாரணையில் பாலியல் பலாத்காரம் உறுதியானதை அடுத்து தலைமறைவான அனந்தகிருஷ்ணன், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் கோவைக்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 24 அன்று சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...