GST பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் குழு: வானதி சீனிவாசன் தகவல்

கோவையில் GST தொடர்பான பிரச்சினைகள் அமைச்சர் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். போலி ஸ்மார்ட் கார்டு விவகாரம், சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவை ராமநாதபுரம் கொண்டசாமி லேஅவுட் மற்றும் அலமேலு மங்கம்மாள் லேஅவுட் பகுதிகளில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் பங்கேற்ற கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், "GST தொடர்பான சிக்கல்களை களைவதற்கு அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. கோவையில் கிடைத்துள்ள GST தொடர்பான விஷயங்கள் அந்த அமைச்சர்கள் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். மாநிலத்தின் நிதி அமைச்சரிடமும் GST தொடர்பான கருத்துக்களை வழங்க இருக்கிறோம்" என்றார்.



ஸ்மார்ட் கார்டுகள் போலியாக உருவாக்கப்படுவது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக கூறிய வானதி சீனிவாசன், "ஏழைகளுக்கு அரசாங்கத்தின் திட்டங்கள் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுகிறது. இதில் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. மாநில அரசு இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "என்கவுண்டர் செய்தால் மக்களை சமாதானப்படுத்தி விடலாம் என்று அரசு நினைக்கிறது. பிரச்சனைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வு காண அரசு முயற்சிப்பதில்லை. அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு மாற்றம் இருக்கலாம் ஆனால் ஏமாற்றம் தமிழக மக்களுக்கு தான்" என்றார்.



பெண்கள், பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்தும் அவர் பேசினார். "உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுபவர்களை கைது செய்கிறது அரசு" என்று விமர்சித்தார்.

மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "கொடுக்கின்ற பணத்தை செலவு செய்யாமல் பிரதமர் பணம் கொடுக்கவில்லை என்று கோரிக்கை வைப்பது ஏன்?" என்ற கேள்வியை எழுப்பினார்.

கோவை புட்டுவிக்கி பகுதியில் மனித கழிவுகள் நேரடியாக நொய்யல் ஆற்றில் கலப்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். "அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மனித கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...