உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு புகார் - வட்டாட்சியர் நேரில் விசாரணை

உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு புகார் எழுந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வட்டாட்சியர் சுந்தரம் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, வட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்தியுள்ளார்.



உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட போடிபட்டி ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ரூ.1 கோடியே 56 ஆயிரத்து 298 முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டது.

விசாரணையின் முடிவில், 2020 ஜனவரி 6 முதல் 2022 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் செலவு ரசீதுகளில் குறைபாடுகள் இருப்பதாக குழு அறிக்கை அளித்தது. இதையடுத்து, உள்ளாட்சிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி, அப்போதைய உடுமலை தாசில்தார் கண்ணாமணி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தற்போதைய மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுரைப்படி, 17 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக உடுமலை தாசில்தார் சுந்தரம் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 12 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியாக தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். இறுதியாக திமுக ஊராட்சி மன்றத் தலைவர் சௌந்தர்ராஜனிடம் கேட்கப்பட்டது. அனைத்து நிகழ்வுகளும் கேமராவில் பதிவு செய்யப்பட்டன.

இது குறித்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் தெரிவித்தார். இந்த விசாரணை நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...