கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: கோபனரி சோதனைச் சாவடியில் தீவிர பரிசோதனை

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, கோபனரி எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.


கோவை: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு-கேரள எல்லையான கோபனரி பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.



கோபனாரி காவல் சோதனைச் சாவடியில் காரமடை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பிரவின், செவிலியர் விஜயலட்சுமி, மருந்தாளுனர் ஆண்டனி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு மற்றும் சிவராஜ் ஆகியோர் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் வாகனங்களில் பயணிப்பவர்களை உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகின்றனர்.

உடல் நிலையை கண்காணித்து, பின்னரே கேரளாவில் இருந்து வருபவர்களை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப்படுகிறது. சுகாதாரத்துறையின் கூற்றுப்படி, இந்த கண்காணிப்பு பணி தொடர்ச்சியாக நடைபெறும். நிபா வைரஸ் பரவலைத் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...