அண்ணா பாணியில் திமுக நிர்வாகிக்கு தங்க மோதிரம் அணிவித்த நீலகிரி எம்பி ஆ ராசா

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில், 90 சதவீதம் வாக்குகள் பெற்றுத் தந்த திமுக நிர்வாகிக்கு நீலகிரி எம்பி ஆ ராசா தங்க மோதிரம் அணிவித்து கௌரவித்தார். மக்களுக்கு நன்றி தெரிவித்து உண்மையாக பணியாற்ற உறுதியளித்தார்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில், நீலகிரி எம்பி ஆ ராசா, தனக்கு ஒரே பூத்தில் 90 சதவீத வாக்குகள் வாங்கிக் கொடுத்த திமுக நிர்வாகிக்கு தங்க மோதிரத்தை அணிவித்து பாராட்டினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளரும் நீலகிரி எம்பியுமான ஆ.ராசா, மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட ஓடந்துறை, சங்கர் நகர் பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் சென்று, தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி 15வது வார்டு பகுதியில் மட்டும் பதிவான 925 வாக்குகளில், 826 வாக்குகள் திமுகவுக்கு பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சிறப்பான செயல்பாட்டிற்காக, 29வது பூத்தில் பணியாற்றிய திமுக நகர செயலாளர் முகமது யூனிசுக்கு, பேரறிஞர் அண்ணாவின் முறைப்படி தொண்டருக்கு மோதிரம் அணிவித்து கௌரவப்படுத்தும் பாலிசியின் படி, ஆ ராசா தங்க மோதிரத்தை பரிசளித்து பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆ ராசா, "கடந்த முறை காட்டிலும் கூடுதலான வாக்குகளை எனக்கு அளித்து வெற்றி பெற செய்துள்ள மக்களுக்கு உண்மையாக நாடாளுமன்றத்தில் பணியாற்றுவேன்" என வாக்குறுதி அளித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...