கோவை கரடிமடை அருகே மண் தோண்டும்போது கண்டெடுக்கப்பட்ட யானை எலும்புகள்: வனத்துறை விளக்கம்

கோவை கரடிமடை அருகே மண் தோண்டும்போது யானை எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. 2014ல் யானைகள் மோதலில் இறந்த யானையின் எலும்புகள் என வனத்துறை தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை வனச்சரகம் கரடிமடை சுற்றுக்கு உட்பட்ட போலாம்பட்டி ஒன்றாவது பிளாக் பெருமாள் கோயில் சரகம் அருகில் உள்ள பட்டா நில காட்டில் மண் எடுக்கும் போது யானை எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

வனத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், செப்டம்பர் 22ஆம் தேதி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது, தோண்டப்பட்ட மண்ணில் யானையின் எலும்புக்கூடு ஒன்று புதைந்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.



2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இரண்டு காட்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. அந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர், அதே இடத்தில் புதைத்ததாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் மண் தோண்டப்பட்டதால், அந்த யானையின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



மேலும், அந்த யானையின் பிரேத பரிசோதனையின் போது, அதன் தந்தங்கள் சேகரித்து வைக்கப்பட்டதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த தந்தங்களின் அடிப்படையில், தற்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அதே யானையின் உடலைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டா நிலம் வனப்பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...