கோவை 29-வது வார்டில் மழைநீர் வடிகால் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார் மேயர்

கோவை மாநகராட்சியின் 29-வது வார்டில் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் 210 மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் கட்டுமான பணியை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இப்பணி மாநகராட்சி பொதுநிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29க்குட்பட்ட கணபதி, கணபதி புதூர் 3-வது வீதியில் மழைநீர் வடிகால் புதுப்பித்து திரும்ப அமைப்பதற்கான கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இப்பணியை மாநகராட்சி பொதுநிதியிலிருந்து 210 மீட்டர் தொலைவிற்கு ரூ.10.80 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.

மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (செப்டம்பர் 24) இப்பணியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இந்நிகழ்வில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் எல்.எஸ்.மகேஷ், நாசர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மழைநீர் வடிகால் கட்டுமான பணி முடிவடைந்ததும், அப்பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது நகரின் வடிகால் அமைப்பை மேம்படுத்தி, சுகாதாரமான சூழலை உருவாக்க உதவும்.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...