கோவை 29-வது வார்டில் மழைநீர் வடிகால் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார் மேயர்

கோவை மாநகராட்சியின் 29-வது வார்டில் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் 210 மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் கட்டுமான பணியை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இப்பணி மாநகராட்சி பொதுநிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29க்குட்பட்ட கணபதி, கணபதி புதூர் 3-வது வீதியில் மழைநீர் வடிகால் புதுப்பித்து திரும்ப அமைப்பதற்கான கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இப்பணியை மாநகராட்சி பொதுநிதியிலிருந்து 210 மீட்டர் தொலைவிற்கு ரூ.10.80 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.

மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (செப்டம்பர் 24) இப்பணியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இந்நிகழ்வில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் எல்.எஸ்.மகேஷ், நாசர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மழைநீர் வடிகால் கட்டுமான பணி முடிவடைந்ததும், அப்பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது நகரின் வடிகால் அமைப்பை மேம்படுத்தி, சுகாதாரமான சூழலை உருவாக்க உதவும்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...