கேரளாவில் நடைபெற்ற கேலோ இந்தியா சைக்கிளிங் போட்டியில் கோவை மாணவி சாதனை

கேரளாவில் நடைபெற்ற கேலோ இந்தியா பெண்கள் சைக்கிளிங் போட்டியில் கோவை மாணவி ஹஷினி நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.


கோவை: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கர்யாவட்டத்தில் கடந்த 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் கேரளா சைக்கிளிங் அசோசியேஷன் சார்பாக "கேலோ இந்தியா" பெண்களுக்கான சைக்கிளிங் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பெண்கள் சப் ஜூனியர், பெண்கள் ஜூனியர், பெண்கள் எலைட் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழகம் சார்பாக கோவையைச் சேர்ந்த மாணவி ஹஷினி கலந்து கொண்டார். அவர் கெரின், ஸ்பிரின்ட் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு தங்கப் பதக்கமும், டைம் டாயல் மற்றும் பர்சியூட் பிரிவுகளில் தலா ஒரு வெள்ளிப் பதக்கமும் என மொத்தம் நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.



இந்த வெற்றியுடன் கோவை திரும்பிய ஹஷினியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இளம் வயதிலேயே சர்வதேச அளவிலான போட்டியில் சாதனை படைத்துள்ள ஹஷினியின் வெற்றி, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த சாதனை மூலம் கோவை மாவட்டத்தின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியையும் இது எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...