கோவையில் கிடந்த ரூ.50,000-ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் ஆணையர் பாராட்டு

கோவை மாநகரில் சாலையில் கிடந்த ரூ.50,000-ஐ C-2 பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிர்மலா என்ற பெண்ணை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


கோவை: கோவை மாநகரில் சாலையில் கிடந்த ரூ.50,000-ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரில் உள்ள ஒரு சாலையில் ஒருவர் ரூ.50,000 பணத்தை அண்மையில் தவறவிட்டுள்ளார். இந்த பணம் அடங்கிய பண்டில் கேட்பாரின்றி கிடந்துள்ளது. இந்நிலையில் அந்த வழியே வந்த நிர்மலா எனும் பெண் இந்த பண்டிலைப் பார்த்துள்ளார். அதில் ரூ.50,000 இருப்பதைக் கண்டதும், அருகில் உள்ள C-2 பந்தய சாலை காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்துள்ளார்.

நேர்மையாக செயல்பட்ட நிர்மலாவை கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS இன்று (செப்டம்பர் 23) நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவரது நேர்மையான செயலுக்காக சிறப்பு சான்றிதழ் ஒன்றையும் வழங்கினார்.

இத்தகைய நேர்மையான செயல்கள் சமூகத்தில் நல்ல முன்னுதாரணமாக அமையும் என்றும், மற்றவர்களும் இதுபோன்ற நேர்மையான செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS தெரிவித்தார். பொதுமக்களின் ஒத்துழைப்பு காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...