பொள்ளாச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த முள்ளம்பன்றி: 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்டது

பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முள்ளம்பன்றி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு முள்ளம்பன்றியை பிடித்து ஆழியார் வனப்பகுதியில் விடுவித்தனர்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முள்ளம்பன்றி ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் இன்று காலை நடந்தது.

அங்கலக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ தேவைக்காக வந்து செல்கின்றனர். இன்று காலை வழக்கம் போல ஊராட்சி தூய்மை பணியாளர்கள் சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள செடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென முள்ளம்பன்றி ஒன்று அப்பகுதியில் தென்பட்டது.



இதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முள்ளம்பன்றியை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், முள்ளம்பன்றி அங்கிருந்து தப்பி ஓடி ஊர் பகுதிக்குள் புகுந்தது.

தொடர்ந்து மூன்று மணி நேரம் நடந்த போராட்டத்திற்குப் பிறகு, வனத்துறையினர் முள்ளம்பன்றியை பிடித்தனர். பின்னர் அதனை ஆழியார் அடர்ந்த வனப் பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...