கோவையில் TNUES ஊழியர்கள் வேலை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவையில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் (TNUES) கீழ் பணியாற்றிய ஊழியர்கள், தங்களது வேலை நிறுத்தப்பட்டதால் மீண்டும் வேலை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


Coimbatore: தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் (TNUES) கீழ் பணியாற்றிய ஊழியர்கள் வேலை வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இந்த ஊழியர்கள் தமிழ்நாடு அரசின் TNUES திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளாக கோவை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பணியாற்றி வந்ததாகக் கூறினர். ஆனால் தற்போது அவர்களின் வேலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளதாகத் தெரிவித்தனர்.



TNUES ஊழியர்கள் மேலும் தெரிவித்ததாவது, "தற்போது சுய உதவிக்குழு மூலம் வேலை வழங்கப்படும் என்றும், குழுவில் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை என்றும் கூறப்படுகிறது. இதனால் குழுவில் இல்லாதவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்."



எனவே, TNUES திட்டத்தின் கீழ் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனுவின் மீது மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Newsletter

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...