கோவையில் TNUES ஊழியர்கள் வேலை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவையில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் (TNUES) கீழ் பணியாற்றிய ஊழியர்கள், தங்களது வேலை நிறுத்தப்பட்டதால் மீண்டும் வேலை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


Coimbatore: தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் (TNUES) கீழ் பணியாற்றிய ஊழியர்கள் வேலை வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இந்த ஊழியர்கள் தமிழ்நாடு அரசின் TNUES திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளாக கோவை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பணியாற்றி வந்ததாகக் கூறினர். ஆனால் தற்போது அவர்களின் வேலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளதாகத் தெரிவித்தனர்.



TNUES ஊழியர்கள் மேலும் தெரிவித்ததாவது, "தற்போது சுய உதவிக்குழு மூலம் வேலை வழங்கப்படும் என்றும், குழுவில் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை என்றும் கூறப்படுகிறது. இதனால் குழுவில் இல்லாதவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்."



எனவே, TNUES திட்டத்தின் கீழ் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனுவின் மீது மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...