மேட்டுப்பாளையத்தில் பூண்டு கிலோ ரூ.436க்கு விற்பனை: நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் தகவல்

மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நேற்று (செப்.22) நடைபெற்ற ஏலத்தில் பூண்டு கிலோ ரூ.436க்கு விற்பனையானது. கடந்த மாதமாக பூண்டு விலை ரூ.400க்கு மேல் உள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் செயல்பட்டு வரும் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மேட்டுப்பாளையம் கிளையில், நேற்று (செப்டம்பர் 22) நடைபெற்ற ஏலத்தில் பூண்டு கிலோ ரூ.436க்கு விற்பனையானது.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் மற்றும் பூண்டு ஆகியவை இங்கு ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. உருளைக்கிழங்குகள் தினசரி ஏலம் விடப்படுகிறது. ஆனால், பூண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் கூடலூர், கேத்தி, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூண்டு விற்பனைக்கு கொண்டு வந்தனர். நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க அதிகாரிகள் கூறுகையில், "கடந்த ஒரு மாதமாக ஒரு கிலோ பூண்டு ரூ.400க்கு மேல் ஏலம் போகிறது. நேற்று விற்பனை கூடத்திற்கு சுமார் 50 கிலோ கொண்ட 30க்கும் மேற்பட்ட பூண்டு மூட்டைகள் கொண்டுவரப்பட்டன," என்று தெரிவித்தனர்.

இந்த உயர்ந்த விலை நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது பூண்டு சாகுபடியை ஊக்குவிக்கும் என்றும் கருதப்படுகிறது.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...