பீளமேடு அவினாசி சாலை உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றியமைக்க கோரி மக்கள் மனு

பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Coimbatore: பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வியாபாரிகளும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பெரும்பாலானோர் விளாங்குறிச்சி சாலையை தினமும் பயன்படுத்தி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த மேம்பாலம் அமைக்கப்படுவது மேற்படிச்சாலையில் பயணம் செய்யும் அனைவருக்கும் பெரும் பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைத்து தர வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...