பீளமேடு அவினாசி சாலை உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றியமைக்க கோரி மக்கள் மனு

பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Coimbatore: பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வியாபாரிகளும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பெரும்பாலானோர் விளாங்குறிச்சி சாலையை தினமும் பயன்படுத்தி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த மேம்பாலம் அமைக்கப்படுவது மேற்படிச்சாலையில் பயணம் செய்யும் அனைவருக்கும் பெரும் பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைத்து தர வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...