குடிசை மாற்று வாரியத்தில் ஊதியம் தராமல் கொலை மிரட்டல்: மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் மனு

கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்தமைக்கு ஊதியம் தராமல் கொலை மிரட்டல் விடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மின் இணைப்பு துண்டிப்பு குறித்தும் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்தமைக்கு ஊதியம் தராமல் கொலை மிரட்டல் விடுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

காளிமுத்து தனது மனுவில், குடிசை மாற்று வாரிய கீரணத்தம் வடக்குத்திட்ட பகுதியில் பணிபுரிந்ததற்கான ஊதியம் கேட்டதற்கு காண்ட்ராக்டர் குப்புராஜ் ஊதியம் தராமல் மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் குடியிருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.



இதேவேளையில், பாதிக்கப்பட்டவருடன் வந்த கொங்கு நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவையைச் சேர்ந்த இளங்கோவன், கீரணத்தம் குடிசை மாற்று வாரியத்தில் மோசடியில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது புகார் அளித்ததாகவும், அவர்கள் மீது விசாரணை நடந்து வரும் சூழலில் புகார் அளித்ததற்காக கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை தனக்கு எதிராக தூண்டிவிட்டதில் தான் தாக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், சாதியைக் கூறி இழிவுபடுத்தப்பட்டதாகவும், குற்றவாளிகள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறிய இளங்கோவன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளங்கோவன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புகார் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...