குடிசை மாற்று வாரியத்தில் ஊதியம் தராமல் கொலை மிரட்டல்: மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் மனு

கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்தமைக்கு ஊதியம் தராமல் கொலை மிரட்டல் விடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மின் இணைப்பு துண்டிப்பு குறித்தும் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்தமைக்கு ஊதியம் தராமல் கொலை மிரட்டல் விடுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

காளிமுத்து தனது மனுவில், குடிசை மாற்று வாரிய கீரணத்தம் வடக்குத்திட்ட பகுதியில் பணிபுரிந்ததற்கான ஊதியம் கேட்டதற்கு காண்ட்ராக்டர் குப்புராஜ் ஊதியம் தராமல் மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் குடியிருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.



இதேவேளையில், பாதிக்கப்பட்டவருடன் வந்த கொங்கு நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவையைச் சேர்ந்த இளங்கோவன், கீரணத்தம் குடிசை மாற்று வாரியத்தில் மோசடியில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது புகார் அளித்ததாகவும், அவர்கள் மீது விசாரணை நடந்து வரும் சூழலில் புகார் அளித்ததற்காக கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை தனக்கு எதிராக தூண்டிவிட்டதில் தான் தாக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், சாதியைக் கூறி இழிவுபடுத்தப்பட்டதாகவும், குற்றவாளிகள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறிய இளங்கோவன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளங்கோவன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புகார் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...