குடிசை மாற்று வாரியத்தில் ஊதியம் தராமல் கொலை மிரட்டல்: மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் மனு

கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்தமைக்கு ஊதியம் தராமல் கொலை மிரட்டல் விடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மின் இணைப்பு துண்டிப்பு குறித்தும் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்தமைக்கு ஊதியம் தராமல் கொலை மிரட்டல் விடுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

காளிமுத்து தனது மனுவில், குடிசை மாற்று வாரிய கீரணத்தம் வடக்குத்திட்ட பகுதியில் பணிபுரிந்ததற்கான ஊதியம் கேட்டதற்கு காண்ட்ராக்டர் குப்புராஜ் ஊதியம் தராமல் மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் குடியிருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.



இதேவேளையில், பாதிக்கப்பட்டவருடன் வந்த கொங்கு நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவையைச் சேர்ந்த இளங்கோவன், கீரணத்தம் குடிசை மாற்று வாரியத்தில் மோசடியில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது புகார் அளித்ததாகவும், அவர்கள் மீது விசாரணை நடந்து வரும் சூழலில் புகார் அளித்ததற்காக கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை தனக்கு எதிராக தூண்டிவிட்டதில் தான் தாக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், சாதியைக் கூறி இழிவுபடுத்தப்பட்டதாகவும், குற்றவாளிகள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறிய இளங்கோவன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளங்கோவன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புகார் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...