குடிசை மாற்று வாரியத்தில் ஊதியம் தராமல் கொலை மிரட்டல்: மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் மனு

கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்தமைக்கு ஊதியம் தராமல் கொலை மிரட்டல் விடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மின் இணைப்பு துண்டிப்பு குறித்தும் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்தமைக்கு ஊதியம் தராமல் கொலை மிரட்டல் விடுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

காளிமுத்து தனது மனுவில், குடிசை மாற்று வாரிய கீரணத்தம் வடக்குத்திட்ட பகுதியில் பணிபுரிந்ததற்கான ஊதியம் கேட்டதற்கு காண்ட்ராக்டர் குப்புராஜ் ஊதியம் தராமல் மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் குடியிருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.



இதேவேளையில், பாதிக்கப்பட்டவருடன் வந்த கொங்கு நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவையைச் சேர்ந்த இளங்கோவன், கீரணத்தம் குடிசை மாற்று வாரியத்தில் மோசடியில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது புகார் அளித்ததாகவும், அவர்கள் மீது விசாரணை நடந்து வரும் சூழலில் புகார் அளித்ததற்காக கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை தனக்கு எதிராக தூண்டிவிட்டதில் தான் தாக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், சாதியைக் கூறி இழிவுபடுத்தப்பட்டதாகவும், குற்றவாளிகள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறிய இளங்கோவன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளங்கோவன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புகார் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...