மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் காட்டு யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் மரப்பாலம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Coimbatore: மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் மரப்பாலம் பகுதியில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்வதற்காக கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய இரண்டு வனச்சாலைகள் உள்ளன. இந்த வனச்சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வரக்கூடிய நிலையில், தற்போது லேசான வறட்சி வனப் பகுதியில் ஏற்பட்டிருக்க கூடிய நிலையில் வன உயிரினங்கள் வனத்தின் சாலை ஓரங்களில் இருக்கக்கூடிய பொருட்களை மேய வெளியே நடமாடி வருகிறது.



மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மரப்பாலம் என்ற இடத்தில் ஒற்றை காட்டு யானை சாலை ஓரத்தில் இருந்த பொருட்களை மேய்ந்து கொண்டு நடமாடிக் கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை அந்தந்த பகுதிகளிலேயே நிறுத்திக் கொண்டனர்.

சாலையோரத்தில் நின்று கொண்டிருக்க கூடிய யானை திடீரென தங்களை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. சுமார் அரை மணி நேரம் அங்கேயே உலாவிய அந்த காட்டு யானை பின்னர் அடர் பகுதிக்குள் சென்று மறைந்தது.

இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் சற்று நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததுடன் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். இனிவரும் காலங்களில் வன உயிரினங்களின் நடமாட்டம் சாலை ஓரங்களில் இருக்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் மிதவேகத்தில் சென்று எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...