தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 1986 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 38 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தனர். துணைவேந்தர், முன்னாள் ஐஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் பதவியில் உள்ளவர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 1986 ஆம் ஆண்டு இளநிலை வேளாண்மை அறிவியல் பயின்ற வேளாண் மாணவர்கள் 38 வருடங்களுக்கு பிறகு இன்று (21.09.2024) பல்கலைக்கழக வளாகத்தில் சந்தித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இம்முன்னாள் மாணவர்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வெ கீதாலட்சுமி, முன்னாள் ஐஜி பெரியய்யா, பல்கலைக்கழக முதன்மையர் (மாணவர் நலம்) முனைவர் நா.மரகதம் மற்றும் பல்வேறு முதன்மை வங்கிகளின் அதிகாரிகள், கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர், உர கண்காணிப்பு அதிகாரி என பல்வேறு துறைகளின் உயர் பதவிகளில் இருக்கும் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தினை தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியினை பரிமாறிக் கொண்டனர். இந்த சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்களது கல்லூரி நாட்களின் இனிய நினைவுகளை மீட்டெடுத்தனர். மேலும், தங்களது தொழில் முன்னேற்றங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு நிகழ்வு, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியையும், அதன் முன்னாள் மாணவர்களின் சாதனைகளையும் எடுத்துக்காட்டியது. இது போன்ற சந்திப்புகள் முன்னாள் மாணவர்களுக்கிடையே நெருக்கமான உறவை வளர்ப்பதோடு, எதிர்கால மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...