ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

பொள்ளாச்சி அருகே நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் அவர் எடுத்துரைத்தார்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூரில் ஆனைமலை கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் 116வது பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மகாலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி கொரடாவுமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அதிமுக ஆட்சியின் போது காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை, மீனவர் பிரச்சினை ஆகிய தமிழக உரிமைகளை மீட்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.



கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று வேலுமணி குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியின் போது ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை செயல்படுத்த கேரளா அரசுடன் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்தி கமிட்டி அமைத்ததாகவும், ஆனால் இந்த திமுக அரசு ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி கார்த்திக், ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...