கோவை துடியலூரில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி அரங்கேற்றம்

கோவை துடியலூர் அருகே வி.கே.வி.நகர் வள்ளி முருகன் கலைக்குழுவின் 78வது வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. 250க்கும் மேற்பட்டோர் ஒரே மாதிரியான உடையில் கும்மி ஆடினர்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே ரங்கம்மாள் காலனி பகுதியில் வி.கே.வி.நகர் வள்ளி முருகன் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி 78வது அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது.

முருகன் வழிபாட்டுடன் தொடங்கிய இந்நிகழ்வில், வள்ளி முருகன் கலைக்குழு ஆசிரியர் பழனிசாமி மற்றும் ரங்கநாதன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இணை ஆசிரியர்களான தயா நிதி, பிரித்தி தயா நிதி, சுபிக்ஷா, மெய்யரசன் ஆகியோரின் மேற்பார்வையில் நிகழ்ச்சி சிறப்பாக அரங்கேறியது.



5 வயது முதல் 50 வயது வரையிலான 250க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியான உடையணிந்து கும்மி ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியை காண சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி ஆகிய இரண்டு வகையான கும்மி நடனங்களும் இந்த நிகழ்வில் அரங்கேற்றப்பட்டன. பாரம்பரிய கலை வடிவங்களை பாதுகாக்கும் முயற்சியாக இந்த ஆண்டு தொடர்ந்து 78வது முறையாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...