கோவை துடியலூரில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி அரங்கேற்றம்

கோவை துடியலூர் அருகே வி.கே.வி.நகர் வள்ளி முருகன் கலைக்குழுவின் 78வது வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. 250க்கும் மேற்பட்டோர் ஒரே மாதிரியான உடையில் கும்மி ஆடினர்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே ரங்கம்மாள் காலனி பகுதியில் வி.கே.வி.நகர் வள்ளி முருகன் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி 78வது அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது.

முருகன் வழிபாட்டுடன் தொடங்கிய இந்நிகழ்வில், வள்ளி முருகன் கலைக்குழு ஆசிரியர் பழனிசாமி மற்றும் ரங்கநாதன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இணை ஆசிரியர்களான தயா நிதி, பிரித்தி தயா நிதி, சுபிக்ஷா, மெய்யரசன் ஆகியோரின் மேற்பார்வையில் நிகழ்ச்சி சிறப்பாக அரங்கேறியது.



5 வயது முதல் 50 வயது வரையிலான 250க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியான உடையணிந்து கும்மி ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியை காண சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி ஆகிய இரண்டு வகையான கும்மி நடனங்களும் இந்த நிகழ்வில் அரங்கேற்றப்பட்டன. பாரம்பரிய கலை வடிவங்களை பாதுகாக்கும் முயற்சியாக இந்த ஆண்டு தொடர்ந்து 78வது முறையாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...