கோவை துடியலூரில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி அரங்கேற்றம்

கோவை துடியலூர் அருகே வி.கே.வி.நகர் வள்ளி முருகன் கலைக்குழுவின் 78வது வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. 250க்கும் மேற்பட்டோர் ஒரே மாதிரியான உடையில் கும்மி ஆடினர்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே ரங்கம்மாள் காலனி பகுதியில் வி.கே.வி.நகர் வள்ளி முருகன் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி 78வது அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது.

முருகன் வழிபாட்டுடன் தொடங்கிய இந்நிகழ்வில், வள்ளி முருகன் கலைக்குழு ஆசிரியர் பழனிசாமி மற்றும் ரங்கநாதன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இணை ஆசிரியர்களான தயா நிதி, பிரித்தி தயா நிதி, சுபிக்ஷா, மெய்யரசன் ஆகியோரின் மேற்பார்வையில் நிகழ்ச்சி சிறப்பாக அரங்கேறியது.



5 வயது முதல் 50 வயது வரையிலான 250க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியான உடையணிந்து கும்மி ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியை காண சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி ஆகிய இரண்டு வகையான கும்மி நடனங்களும் இந்த நிகழ்வில் அரங்கேற்றப்பட்டன. பாரம்பரிய கலை வடிவங்களை பாதுகாக்கும் முயற்சியாக இந்த ஆண்டு தொடர்ந்து 78வது முறையாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...