கோயில் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலப்பு குற்றச்சாட்டு: இந்து முன்னணி போராட்டம்

இந்து கோயில்களில் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டித்து இந்து முன்னணி சார்பில் 28 ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.



Coimbatore: இந்து கோயில்களில் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டித்து இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் வரும் 28 ஆம் தேதி ஆஞ்சநேயர் கோவில்கள் முன்பு தேங்காய் உடைத்து வேண்டுகோள் வைக்கும் வடிவில் நடைபெறும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தாராபுரம் ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு பேசிய அவர், திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக கூறப்படுவது வருத்தத்துக்குரியது என்றார். இது ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்த காலத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



தமிழக கோயில்களிலும் பக்தர்களுக்கு தரமற்ற பிரசாதம் வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சுப்பிரமணியம் கூறினார். பழனி உள்பட தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களை தர சோதனை செய்ய வேண்டும் என்பது இந்து முன்னணியின் கோரிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் செந்தில்குமார், கோட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர்கள் பாலசுப்பிரமணி, சங்கிலித்துறை நகர நிர்வாகிகள் சண்முகம், கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...