கலைஞர் புத்தக விநியோக வழக்கு: கோவை நீதிமன்றத்தில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆஜர்

கோவை நீதிமன்றத்தில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆஜரானார். 2014ல் கலைஞரின் புத்தகத்தை விநியோகித்தபோது அதிமுக மன்றத்தை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது.


Coimbatore: கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), சனிக்கிழமை (21.09.2024) காலை கோவை ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜரானார். 2014ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" என்ற புத்தகத்தை பொதுமக்களுக்கு விநியோகித்த போது, அதிமுக மன்றத்தை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது.

இந்த சம்பவம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்தது. புத்தக விநியோகத்தின் போது, அருகிலிருந்த அதிமுக மன்றம், அதன் பெயர்ப்பலகை மற்றும் கொடிக்கம்பத்தை அடித்து உடைத்ததாகவும், அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாகவும் நா.கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை பொய் வழக்கு என திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.



நீதிமன்றத்திற்கு வந்த நா.கார்த்திக்குடன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன், வழக்கறிஞர்கள் அகஸ்டஸ், ப.கிருஷ்ணமூர்த்தி, மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன், மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



மேலும், மாநகர மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கே.ஆர்.ராஜா, பல்வேறு வட்டக்கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...