கோவை அரசு மருத்துவர்கள் ஈரோடு தொழிலாளியின் தொடையில் இருந்து துப்பாக்கி குண்டை வெற்றிகரமாக அகற்றினர்

ஈரோடு தொழிலாளி செந்தில்குமாரின் தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர்களை பாராட்டினர்.


கோவை: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி செந்தில் குமார் (45) என்பவரின் வலது தொடையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறின் போது ஏர்கன் துப்பாக்கியால் சுடப்பட்ட குண்டை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

முதலில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட செந்தில்குமார், கட்டுக்கடங்காத ரத்தப்போக்கு காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில், ஏர்கன் குண்டு ரத்த நாளத்தை துளைத்து எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.

நோயாளியின் நிலையை நிலைப்படுத்திய பின்னர், இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இதில், சேதமடைந்த ரத்த நாளம் சரி செய்யப்பட்டு, தொடையில் ஆழமாக தங்கியிருந்த துப்பாக்கி குண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதன் மூலம் நோயாளியின் உயிரும் காலும் காப்பாற்றப்பட்டது.

இந்த சிறப்பான சிகிச்சைக்காக, முதல்வர் பேராசிரியர் டாக்டர் அ.நிர்மலா மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் கண்ணதாசன் ஆகியோர் இரத்த நாள நிபுணர்கள் டாக்டர் ப.வடிவேலு, டாக்டர் பா.தீபன்குமார் உள்ளிட்டோரை செப்டம்பர் 20 அன்று பாராட்டினர். தற்போது செந்தில்குமார் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப உள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...