கோவை அரசு மருத்துவர்கள் ஈரோடு தொழிலாளியின் தொடையில் இருந்து துப்பாக்கி குண்டை வெற்றிகரமாக அகற்றினர்

ஈரோடு தொழிலாளி செந்தில்குமாரின் தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர்களை பாராட்டினர்.


கோவை: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி செந்தில் குமார் (45) என்பவரின் வலது தொடையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறின் போது ஏர்கன் துப்பாக்கியால் சுடப்பட்ட குண்டை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

முதலில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட செந்தில்குமார், கட்டுக்கடங்காத ரத்தப்போக்கு காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில், ஏர்கன் குண்டு ரத்த நாளத்தை துளைத்து எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.

நோயாளியின் நிலையை நிலைப்படுத்திய பின்னர், இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இதில், சேதமடைந்த ரத்த நாளம் சரி செய்யப்பட்டு, தொடையில் ஆழமாக தங்கியிருந்த துப்பாக்கி குண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதன் மூலம் நோயாளியின் உயிரும் காலும் காப்பாற்றப்பட்டது.

இந்த சிறப்பான சிகிச்சைக்காக, முதல்வர் பேராசிரியர் டாக்டர் அ.நிர்மலா மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் கண்ணதாசன் ஆகியோர் இரத்த நாள நிபுணர்கள் டாக்டர் ப.வடிவேலு, டாக்டர் பா.தீபன்குமார் உள்ளிட்டோரை செப்டம்பர் 20 அன்று பாராட்டினர். தற்போது செந்தில்குமார் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப உள்ளார்.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...