கற்பகம் பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா: 2644 மாணவர்களுக்கு பட்டம்

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2644 மாணவர்கள் பட்டம் பெற்றனர். டாக்டர் A.வேலுமணி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.


கோவை: கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா 21.09.2024 சனிக்கிழமையன்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் கு.இராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச.வசந்தகுமார் முன்னிலை வகித்தார்.



விழாவில் தமயந்தி வசந்தகுமார், முதன்மைச்செயல் அலுவலர் க. முருகையா, துணைவேந்தர் டாக்டர் ப.வெங்கடாசலபதி, பதிவாளர் முனைவர் சு.இரவி, தேர்வாணையர் முனைவர் ப.பழனிவேலு மற்றும் முதன்மையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தைரோகேர் அமைப்பாளர் டாக்டர் A.வேலுமணி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.



அவரது உரையில், "பண்பட்ட கல்வியே சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை. தனிமனித ஒழுக்கத்திலும், சமுதாயப் பொறுப்புணர்விலும், திறன் மேம்பாட்டிலும் சிறந்த மாணவர்கள் உயர்ந்த சமுதாயத்தைக் கட்டமைக்கின்றனர். அவர்களது பெருமுயற்சிக்கு கல்வியே தலைச்சிறந்த கருவி. நாட்டின் உயர்வே அவர்களது கல்வியின் பெரும்பயன்" என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "மாணவர்கள் அத்தகைய பொதுநல நோக்கத்துடன் சிறந்த ஆளுமைகளாக மிளிர வேண்டும். புதிய கல்விக்கொள்கை முதலானவை திறன் மேம்பாட்டிற்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் துணைசெய்வதை மாணவர்கள் உணர வேண்டும். அவர்கள் தமது ஆய்வுப்பங்களிப்பின் வாயிலாக நாட்டின் அனைத்துத் துறைச்சார்ந்த வளர்ச்சிக்கும் ஆக்கம் சேர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய மாணவர்களின் அறிவும், ஆளுமையும் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட டாக்டர் A.வேலுமணி, "மாணவர்கள் இதனை உணர்ந்து அடிப்படைக் கல்வி, மருத்துவம் முதலானவற்றுடன் அறிவியல் ஆக்கமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் அனைத்து மக்களையும் சென்றடைவதற்கு பொதுநல நோக்கத்தில் உழைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.





இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2644 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.





அதில் 51 மாணவர்களுக்குத் தங்கப்பதக்கங்களும், பல்வேறு துறைகள் சார்ந்த 52 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டன.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...