உடுமலை ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் செயற்கை நீரூற்றை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்

உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளை சிலை, செயற்கை நீரூற்று மற்றும் புதுப்பிக்கப்பட்ட அசோகர் ஸ்தூபி ஆகியவற்றை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் செயற்கை நீரூற்றை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேற்று திறந்து வைத்தார்.



உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாக இந்த ரவுண்டானா போதிய பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சியளித்து வந்தது. இதனால் பொதுமக்கள் ரவுண்டானாவை பராமரித்து அழகுபடுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தன்னார்வலர்களின் உதவியுடன் ரவுண்டானா புதுப்பிக்கப்பட்டுள்ளது.



"பிறப்பிற்கும் எல்லா உயிருக்கும்" என்ற திருக்குறளுக்கு ஏற்ப, தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஏறு தழுவுதலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்துக்கள் மற்றும் வீரர்களுடன் கூடிய ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.





மேலும், வண்ண வண்ண விளக்குகள், செயற்கை நீரூற்றுப் பூங்கா ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் சமூக பங்களிப்பு நிதியில் அமைக்கப்பட்ட தலைவர்கள் பூங்கா மற்றும் புதுப்பிக்கப்பட்ட அசோகர் ஸ்தூபி சந்திப்பு ஆகியவற்றையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

உடுமலையின் அடையாளமாக அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் செயற்கை நீரூற்று முன்பு பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.



இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், நகர மன்ற தலைவர் மத்தின், நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...