உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் எத்தலப்ப நாயக்கர் கோவிலில் பாரம்பரிய தேவராட்டம்

உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள எத்தலப்ப நாயக்கர் கோவிலில் வருடாந்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பாரம்பரிய தேவராட்டம், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் அமைந்துள்ள எத்தலப்ப நாயக்கர் திருக்கோவிலில் வருடாந்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய எத்தலப்ப நாயக்கரின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.



புரட்டாசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில், எத்தலப்ப நாயக்கர் வம்சாவழியினர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்கின்றனர்.



இந்த ஆண்டு விழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

முதலில், எத்தலப்ப நாயக்கரின் குலதெய்வமான ஜக்கம்மாளுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்டவை அடங்கும். தொடர்ந்து, எத்தலப்ப நாயக்கர், அவரது துணைவியார், படைத் தளபதிகள் மற்றும் போர் வீரர்களின் சிலைகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



பின்னர், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட ஜக்கம்மாள், எத்தலப்ப நாயக்கர், அவரது துணைவியார் ஆகியோரின் சிலைகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



விழாவின் முக்கிய நிகழ்வாக, பாரம்பரிய இசைக்கருவியான உருமியின் ஒலியுடன் தேவராட்டம் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் எத்தலப்ப நாயக்கரின் வம்சாவழியினர் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...