கரூரில் இருந்து திருட்டுத்தனமாக மணல் திருடிவந்த லாரியை சிறைபிடித்த சூலூர் லாரி உரிமையாளர்கள்

கரூரில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புடைய மணலை திருட்டுத்தனமாக கொண்டு வந்த லாரிகளை சூலூர் லாரி உரிமையாளர்கள் சிறைபிடித்தனர்.

தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் மணல் எடுக்க தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக கரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் உள்ள குவாரிகளில் மணல் திருடப்பட்டு வந்தது.

இது குறித்து உரிய சோதனை மேற்கொள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் அரசு அறிவுறுத்தியிருந்தாலும், காவல்துறைக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு திருட்டு மணல் விற்பனை படுஜோராக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.



இந்நிலையில் இன்று அதிகாலை கரூரில் இருந்து 12 சக்கரம் கொண்ட நான்கு லாரிகளில் 36 யூனிட் மற்றும் 10 சக்கரம் கொண்ட ஒரு வாகனத்தில் 3.5 யூனிட் மணலும் விற்பனைக்காக கொண்டு வரும்போது சூலூர் மணல் லாரி உரிமையாளர்கள் வட்டாட்சியர் பழனி முன்னிலையில் சிறைபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மணல் லாரிக்கு முன்பாக வந்த காரில் இருந்தவர்கள் வட்டாட்சியரை லாரிகளை விடச்சொல்லி மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சூலூர் மணல் லாரி உரிமையாளர்கள் மிணல் திருடி வந்தவர்களை எதிர்த்த நிலையில், காரில் வந்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

தமிழக அரசு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மணல் குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...