கோவை சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியில் நிலைத்தன்மை பயிற்சியாளர்கள் குழுவின் தொடக்க விழா

கோவை சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியில் நிலைத்தன்மை பயிற்சியாளர்கள் குழுவின் தொடக்க விழா நடைபெற்றது. ஐந்து மாநகராட்சி பள்ளிகளில் 460 மாணவர்களுக்கு நிலைத்தன்மை மனப்பான்மை பாடத்திட்டம் அறிமுகம்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியில், கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ழ நிலைத்தன்மை பயிற்சியாளர்கள் குழு (Zha Sustainability Practitioners Club) இணைந்து நடத்தும் பள்ளிகளில் நிலைத்தன்மை பயிற்சியாளர்கள் குழுவின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வு மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமையில் செப்டம்பர் 20, 2024 அன்று நடைபெற்றது.

முதற்கட்டமாக, கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள ஐந்து பள்ளிகளில் ழ நிலைத்தன்மை மனப்பான்மை பாடத்திட்டம் (Zha Sustainability Mindset Curriculum - ZSPC) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முயற்சியின் நோக்கம் மாணவர்களிடையே நிலைத்தன்மை மனப்பான்மையை வளர்ப்பது, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அவர்களை தயார்படுத்துவதாகும்.



இந்த திட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து பள்ளிகளில் அமல்படுத்தப்படுகிறது. அவை:

1. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரங்கநாதபுரம்

2. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மேற்கு

3. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ஒக்கிலியர் காலனி

4. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, சித்தாபுதூர்

5. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பீளமேடு

இந்த பள்ளிகளில் 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் சுமார் 460 மாணவ, மாணவியர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள் இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.



நிகழ்வின் ஆரம்பத்தில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் ழ நிலைத்தன்மை தொடர்பான புத்தகத்தை வெளியிட்டனர். இந்நிகழ்வில் உதவி ஆணையர் செந்தில்குமரன், மாநகராட்சிக் கல்வி அலுவலர் ஆர்.குணசேகரன், ழ அறக்கட்டளை நிறுவனர் கார்க்கி அசோக்குமார், இணை நிறுவனர் ஆர்.எஸ்.விக்னேஷ், செயலாளர் பிரசன்னாதேவி, இணை நிறுவன குழுவின் ஆளுநர் லதா சுந்தரம், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...