கோவையில் சீருடை தொகை வழங்காததால் அரசுப் பேருந்துகள் ஜப்தி

கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சீருடைக்கான தொகையை வழங்காததால், நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.


Coimbatore: கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சீருடைக்கான தொகையை வழங்காததால், நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு ஒப்பந்தத்தின்படி வருடத்திற்கு நான்கு ஜோடி சீருடைகளுக்கான நிதி வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த தொகை பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.



இது தொடர்பாக, கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் நடத்துநர் மோகன்ராஜ் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் ஆறு ஆண்டுகளுக்கான 46,583 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. ஆனால், போக்குவரத்துக் கழகம் இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை.

இதேபோல், நடத்துநர் கே.பி. சக்திவேல் என்பவரும் 2007 முதல் வழங்கப்படாத பணி வரன்முறை நிலுவைத் தொகை குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த இரண்டு வழக்குகளின் அடிப்படையில், நீதிமன்றம் இரண்டு மாநகர பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள் தற்போது நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சீருடை பணியாளர்கள் சங்கம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு உடனடியாக சீருடைத் தொகை மற்றும் பணி வரன்முறை நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...