கோவையில் சீருடை தொகை வழங்காததால் அரசுப் பேருந்துகள் ஜப்தி

கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சீருடைக்கான தொகையை வழங்காததால், நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.


Coimbatore: கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சீருடைக்கான தொகையை வழங்காததால், நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு ஒப்பந்தத்தின்படி வருடத்திற்கு நான்கு ஜோடி சீருடைகளுக்கான நிதி வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த தொகை பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.



இது தொடர்பாக, கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் நடத்துநர் மோகன்ராஜ் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் ஆறு ஆண்டுகளுக்கான 46,583 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. ஆனால், போக்குவரத்துக் கழகம் இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை.

இதேபோல், நடத்துநர் கே.பி. சக்திவேல் என்பவரும் 2007 முதல் வழங்கப்படாத பணி வரன்முறை நிலுவைத் தொகை குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த இரண்டு வழக்குகளின் அடிப்படையில், நீதிமன்றம் இரண்டு மாநகர பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள் தற்போது நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சீருடை பணியாளர்கள் சங்கம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு உடனடியாக சீருடைத் தொகை மற்றும் பணி வரன்முறை நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...