கோவையில் சீருடை தொகை வழங்காததால் அரசுப் பேருந்துகள் ஜப்தி

கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சீருடைக்கான தொகையை வழங்காததால், நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.


Coimbatore: கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சீருடைக்கான தொகையை வழங்காததால், நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு ஒப்பந்தத்தின்படி வருடத்திற்கு நான்கு ஜோடி சீருடைகளுக்கான நிதி வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த தொகை பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.



இது தொடர்பாக, கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் நடத்துநர் மோகன்ராஜ் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் ஆறு ஆண்டுகளுக்கான 46,583 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. ஆனால், போக்குவரத்துக் கழகம் இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை.

இதேபோல், நடத்துநர் கே.பி. சக்திவேல் என்பவரும் 2007 முதல் வழங்கப்படாத பணி வரன்முறை நிலுவைத் தொகை குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த இரண்டு வழக்குகளின் அடிப்படையில், நீதிமன்றம் இரண்டு மாநகர பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள் தற்போது நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சீருடை பணியாளர்கள் சங்கம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு உடனடியாக சீருடைத் தொகை மற்றும் பணி வரன்முறை நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...