மேட்டுப்பாளையம் பாரதி நகரில் ரூ.17 லட்சம் மதிப்பிலான புதிய ரேஷன் கடை திறப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சியின் பாரதி நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான புதிய ரேஷன் கடையை சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் திறந்து வைத்தார்.


Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 31வது வார்டு பாரதி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் கலந்துகொண்டு ரேஷன் கடையைத் திறந்து வைத்தார்.



மேலும், பொதுமக்களுக்கு முதல் விற்பனையையும் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அமுதா, 31வது நகர்மன்ற உறுப்பினர் விஜயலட்சுமி மற்றும் அந்தப் பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் புதிய ரேஷன் கடை திறப்பு விழா, பாரதி நகர் பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் எளிதாக அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...