கொடநாடு கொலை, கொள்ளைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசே காரணம்- சூலூர் எம்எல்ஏ கனகராஜ் குற்றச்சாட்டு

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசே காரணமெனவும், முதலமைச்சர் வாழ்ந்த இடத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் செஞ்சேரி மலை அருகேயுள்ள பச்சாகவுண்டம்பாளையம் பகுதியில் ஆறுமுக கவுண்டர் என்ற தென்னை விவசாயி இரண்டு போர்வெல் போட்டும் தண்ணீர் வராததால், கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இவரது குடும்பத்திற்கு அதிமுக அம்மா அணியை சேர்ந்த சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் கனகராஜ் தனது ஒரு மாத எம்எல்ஏ ஊதியமான 55 ஆயிரம் ரூபாயை இன்று இழப்பீடாக வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ கனகராஜ் கூறுகையில், இரண்டு போர்வெல்கள் போட்டும் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட ஆறுமுக கவுண்டர் குடும்பத்திற்கு தன்னால் முடிந்த சிறுதொகையினை முதலுதவியாக வழங்கி உள்ளேன். மேலும், அவரது குடும்பத்திற்கு அரசிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க உள்ளேன். 

தன்னை போல அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். 

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு எனது அரசான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசே காரணம். முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த இடத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் கட்சிக்கும், தமிழக அரசிற்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. 

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் மீதான வழக்கு உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே அணி மாறுவதாக அறிவித்தோம். தற்போது அணி மாறும் சூழல் இல்லை. இவ்வாறு எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...