கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு-கேரள எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம்

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு-கேரள எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இரு மாநில காவல் அதிகாரிகள் எல்லை தாண்டிய குற்றங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.


Coimbatore: கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில காவல்துறையினரின் எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தகேயன் மற்றும் கேரளா காவல் கண்காணிப்பாளர் ஆனந்த்ப் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ், கேரளா பாலக்காடு உதவி காவல் கண்காணிப்பாளர் அஸ்வதி ஜுஜி, பாலக்காடு கலால் துறை ஆணையர் ராகேஷ், பெரியநாயக்கன் பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் இளமுருகன், அகலி துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் உள்ளிட்ட பல்வேறு காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள், உளவுத்துறை தகவல்கள் பரிமாற்றம், லாட்டரி, பாலியல் தொழில், போலி மது, கஞ்சா, கனிமங்கள், மணல், மதிப்புமிக்க பொருட்கள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், எல்லை சோதனைச் சாவடிகளின் செயல்பாடுகள், இரு மாநிலங்களின் தனிப்படைகளை ஒருங்கிணைப்பது, NBW கைதிகளை கைது செய்தல், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு ஆகிய விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டன.



சட்டவிரோத போக்குவரத்து, மருத்துவக் கழிவுகள் மற்றும் கால்நடைக் கழிவுகளை கொட்டுவதைத் தடுத்தல், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு போன்ற பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன. இரு மாநில காவல் அதிகாரிகளும் எல்லை தாண்டி செயல்படும்போது எதிர்கொள்ளும் இடையூறுகளை எடுத்துரைத்தனர். இதையடுத்து, இரு மாநில காவல் கண்காணிப்பாளர்களும் பணியில் உள்ள இடையூறுகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...