தமிழகம் இந்தியாவின் போதை தலைநகரம் - பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

பொள்ளாச்சியில் சாலை திறப்பு விழாவில் பேசிய அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், தமிழகம் போதையில் தத்தளிக்கும் மாநிலமாகவும் இந்தியாவின் போதையின் தலைநகரமாகவும் விளங்குவதாக குற்றம்சாட்டினார்.



கோவை: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கிபாளையம் பகுதியில் 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அடிக்கல் நாட்டினார்.



இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.



"இந்தியாவின் போதையின் தலைநகராக தமிழகம் விளங்குகிறது. தமிழகம் போதையில் தத்தளித்து கொண்டிருக்கிறது," என்று ஜெயராமன் குற்றம்சாட்டினார். அண்மையில் பொள்ளாச்சி பகுதியில் நடந்த சில சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், மாவடப்பு பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும், ஆனைமலை அருகே செம்மனாபதி பகுதியில் 3000 லிட்டருக்கும் மேலான எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டார்.

பொள்ளாச்சியின் பல பகுதிகளில் கள்ளச்சாராயமும் போதை பொருட்களும் தாராளமாக கிடைப்பதாக கூறிய ஜெயராமன், இதனை தடுக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், இலங்கைக்கு கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்திலிருந்து கடல் வழியாக கடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பிய ஜெயராமன், "காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா அல்லது கடத்தல்காரர்களுக்கு துணை போகிறதா?" என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்தும் கருத்து தெரிவித்த ஜெயராமன், "கொங்கு மண்டலத்தில் அதிமுகவை வளர்த்து வரும் வேலுமணியை பொறுக்க முடியாமல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் சட்டரீதியாக இதனை எதிர்கொண்டு வெளியே வருவார்," என்றார்.

இந்நிகழ்வில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...